உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

கடலூர் நாய்க் கடிக்குசிகிச்சை பெறாததால் கூர்நோக்கு இல்ல சிறுவன் பலி

கடலூர்:

             கடலூர் கூர்நோக்கு இல்ல சிறுவனை நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

                வேலூர் மாவட்டம் போளூர் அடுத்த காம்பூரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பரணி (14). இவர் கடலூர் அடுத்த கோண்டூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தான். பரணியை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நாய் கடித்துள்ளது. இதற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக சிறுவன் பரணி உடல் நலமின்றி காணப்பட்டான். பின்னர் கூர் நோக்கு இல்ல அலுவலர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு பரணி இறந்தான். இது குறித்து கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் தாஸ் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior