உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

வெளிமாநில ஆசாமிகள் நடமாட்டம்: திட்டக்குடியில் திருட்டு அபாயம்

திட்டக்குடி:

             திட்டக்குடி நகர்ப்புறத்தில் கணவன், மனைவி என குடும்பமாக பிச்சையெடுக்கும் வெளிமாநில ஆசாமிகளால் திருட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. திட்டக்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி, சிறுபாக்கம், ராமநத்தம், வேப்பூர் பகுதிகளில் மின் கம்பி திருட்டு, இரவு நேரங்களில் வீட்டினுள் புகுந்து திருடுவது என குற்றங்கள் அதிகளவு நடந்து வந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

             இப்பகுதிகளில் சமீப காலமாக ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தாங்கள் வழி தவறி வந்து விட்டதாகவும், ஊருக்கு திரும்பிச் செல்ல பணம் வேண்டும் என கூறி பிச்சையெடுத்து வருகின்றனர். இதுபோன்ற ஆசாமிகள் பகலில் பிச்சையெடுப்பது போல் நோட்டமிட்டு இரவில் திருடவும், பகலில் தனியாக இருக் கும் பெண்களிடம் நகை, பொருட்களை அபகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தி வெளி மாநிலங்களிலிருந்து மாவட்டத்திற்குள் வரும் ஆசாமிகளை விசாரணை மேற்கொண்டு அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior