உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

சி.முட்லூர் புற வழிச்சாலையில் அறிவிப்புபலகை அமைக்க கோரிக்கை

கிள்ளை:

             சி.முட்லூர் புறவழிச் சாலையில் உள்ள கல்வி நிறுவனங்களில் அருகில் வேகத்தடை மற்றும்  அறிவிப்பு பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

           சிதம்பரம் அடுத்த பி.முட்லூரில் இருந்து சிதம்பரம் வண்டிகேட் வரை புறவழிச்சாலை பணிமுடிந்துள்ளது. புதிய சாலை பயன்பாட்டிற்கு விடாத நிலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. சி.முட்லூர் வெள்ளாற்றுப் பாலத்தில் இருந்து சிதம்பரம் சாலையில் 100 மீ., தொலையில் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதி, பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. அவ்வழியே வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.சாலை பணி முடிந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட உயிர் பலியும், 50க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

                  எனவே பள்ளிகள் அருகிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த  பகுதிகளிலும் வேகத்தடை மற்றும் அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior