உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

வரைகலை போட்டியில் பண்ருட்டி மாணவர் முதலிடம்

கடலூர்:

             உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் நடந்த பள்ளி அளவிலான இணைய தள கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை தனி நபர் போட்டியில் பண்ருட்டி மாணவர் முதல் பரிசை பெற்றார்.

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் நடந்த பள்ளி அளவிலான இணையதள கம்ப்யூட்டர் தமிழ் வரை கலை தனி நபர் போட்டி நடந்தது. இதில் பண்ருட்டி நியூ ஜான் டூயி பள்ளியை சேர்ந்த சுதாகரன் முதல் பரிசு பெற்றார். புனித மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளி சமரிநாதன் 2ம் பரிசும், திருவந்திபுரம் ஸ்ரீவித்யா கலாகேந்திரம் பள்ளியை சேர்ந்த மாணவர் கலைச்செல்வன் 3ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் சீத்தாராமன் பாராட்டி பரிசு வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior