உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

பரங்கிப்பேட்டையில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை : டாஸ்மாக் கடை இடமாற்றம்

பரங்கிப்பேட்டை : 

           பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை இரண்டாவது நாளாக முற்றுகையிட்டதால் கடை மாற்றப்பட்டது. 

              கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பரங்கிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று மாலை அதே இடத்தில் மீண்டும் கடையை திறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior