உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

கடலூரில் 22 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர்:

                 கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், 22.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.

                    மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள் பெறப்பட்டன. அவை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

                 தாட்கோ மூலம் துப்புரவுப் பணியாளர் நலவாரியத் திட்டத்தில் 11 பேருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித் தொகை 14,200, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 74 பேருக்கு 18 லட்சம் உதவித் தொகை உள்ளிட்ட 22.80 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior