உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

சேத்தியாத்தோப்பு அருகே ரசாயன கல் வெடித்து மூவர் படுகாயம் : பழக்கடை, சலூன் சேதம்



சேத்தியாத்தோப்பு : 

                   சேத்தியாத்தோப்பு பழக்கடையில் பயங்கர சத்தத்துடன் ரசாயன கல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

                       கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (50). இவருக்கு சொந்தமான ஏ.ஜி.ஆர்., பழக்கடை சேத்தியாத்தோப்பு கடை வீதியில் உள்ளது. நேற்று மாலை 4.45 மணிக்கு கடையின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிமென்ட் ஓடுகள் தூள் துளாகி கடை வீதி முழுவதும் சிதறின. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அருகில் இருந்த ஆனந்தன் என்பவரின் சலூன் கடையும் சேதமடைந்தது.

                   இவ்விபத்தில் ராமலிங்கம், கடையில் வேலை செய்யும் அகர ஆலம்பாடி வேல்முருகன், சக்திவிளாகம் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பழக்கடையில் பழம் பழுக்க வைத்திருந்த ரசாயன கல் வெடித்தது தெரிந்தது.

பழக்கடையில் வைத்திருந்த ரசாயன கல் வெடித்ததா... 

                        வேறு ஏதாவது வெடி பொருட்கள் வெடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior