உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

கடலூர் கூத்தப்பாக்கத்தில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

கடலூர் : 

                  கூத்தப்பாக்கம் சக்தி நகரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. கடலூர் திருவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் கட்டுப்பாட்டில்  அதிக ரேஷன் கார்டு உள்ளதால் கூத்தப்பாக்கம் சக்தி நகரில் 883 ரேஷன் கார்டுகளுக்காக தனி ரேஷன் கடை அமைக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவர் கோமதி சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி முன்னிலை வகித்தார். மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார்.எம்.எல்.ஏ., அய்யப்பன் ரேஷன் கடையை திறந்து விற்பனையை துவக்கி வைத்தார்.

                      மேலும் செல்லங்குப்பத்தில் முழு நேர ரேஷன் கடை, வெளிச்செம்மண்டலத்தில் 251 ரேஷன் கார்டுகளுக்கு பகுதி நேர ரேஷன் கடையும், புதுப்பாளையம் கூட்டுறவு பண்டக சாலையில் தீபாவளி பட்டாசு விற்பனை நிலையத்தையும் எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார். இவ்விழாக்களில் கடலூர் சேர்மன் தங்கராசு, பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் மகபூப் ஷெரீப், கோண்டூர் ஊராட்சி தலைவர் சுஜாதா, கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், தனி அலுவலர்கள் நிர்மலா, கோபிநாத், கிருஷ்ணராஜ், இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior