உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

சிதம்பரம் லால்புரத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அகற்ற இந்திய கம்யூ., கோரிக்கை

சிதம்பரம் : 

               சிதம்பரம் லால்புரத்தில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

                     இந்திய கம்யூ., லால்புரம் கிளை மாநாடு கிளை செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. மணிகண்டன், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர் பேசினர். குமார், ஆதிமூலம், மரியம் பீவி, உட்பட பலர் பங்கேற்றனர். 

                   கூட்டத்தில், லால்புரம் பகுதியில் நீண்ட நாட்களாக உள்ள குடிநீர் பிரச்னையைப் போக்க கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பாசன வாய்க்காலில் கலப் பதை தடுக்க வேண்டும். ஆரம்பப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior