உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

சபரிமலை சேவைக்கு 5 ஆயிரம் தொண்டர்கள்

கடலூர், நவ.13:

சபரிமலையில் பக்தர்களுக்குச் சேவை புரிய தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் தொண்டர்கள் செல்ல இருப்பதாக, அகில பாரத அய்யப்ப சேவா சங்க சென்னை மாநில தொண்டர் படை முதன்மைத் தளபதி ஜெகதீஷ் தெரிவித்தார்.
கடலூர் வந்த ஜெகதீஷ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சபரிமலைக்கு வரும் தொண்டர்களுக்குச் சேவை செய்வதற்காக ஆண்டுதோறும் அய்யப்ப சேவா சங்கத் தொண்டர்கள் சபரி மலைக்குச் செல்கிறார்கள். சன்னிதானத்தில் இருந்து பம்பை வரை இவர்கள் சேவை செய்வார்கள். கடந்த ஆண்டு 4 ஆயிரம் தொண்டர்கள் சபரிமலைக்குச் சென்றனர். இந்த ஆண்டு 5 ஆயிரம் தொண்டர்கள் செல்ல இருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் சபரிமலைக்கு வந்து இறந்தவர்கள் 125 பேர். மரணம் அடைந்தவர்களின் உடல்களை சன்னிதானத்தில் இருந்து பம்பை வரை, தொண்டர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள். கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவார்கள். மண்டல பூஜை அன்று சாமிக்கு அணிவிக்கும் தங்கக் கவசத்தை, பம்பையில் இருந்து சன்னிதானம் வரை அய்யப்ப சேவ சங்கத்தினர்தான் கொண்டு செல்கிறார்கள்.
தொண்டர்கள் ஜனவரி 20-ம் தேதிவரை அங்கு இருப்பர். அய்யப்ப சேவா சங்கம் சார்பில் தினமும் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜோதி தரிசனத்தின்போது இது 50 ஆயிரமாக அதிகரிக்கும். அத்துடன் மூலிகை கலந்த தணணீர், சுக்குநீர், இலவசமாக வழங்குகிறோம். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தேவஸ்வம் போர்டு ஹோட்டல் ஒன்றை இலவசமாக வழங்கி இருக்கிறது என்றார் ஜெகதீஷ்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior