உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

சென்னைவெள்ளாற்றுக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

சிதம்பரம்,நவ.15:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது. எனவே ஏரியிலிருந்து வெள்ளாற்றுக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழை நீர் காட்டாறுகள் மூலம் செங்கால்ஓடை, கருவாட்டுஓடை வழியாக ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரிக்கு 2500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த ஆண்டு முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை ஏரியின் நீர் மட்டம் 44.7அடியைத் தொட்டது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5அடியாகும். சேத்தியாத்தோப்பு பம்பிங் ஸ்டேஷனிலிருந்து சென்னை மெட்ரோ வாட்டருக்கு விநாடிக்கு 75 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக கடந்த வாரம் பெய்த மழயின் போது நீரை வெளியேற்றிய போது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்திமங்கலம், எடையார், திருநாரையூர் உள்ளிட்ட 20 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ளியங்கால் ஓடையில் நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். அணைக்கட்டு மற்றும் பாழ்வாய்க்கால் வழியாக வெள்ளாற்றுக்கு நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது மீண்டும் ஏரிக்கு கூடுதலாக நீர் வந்ததால் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ் அணைக்கட்டு மற்றும் பாழ்வாய்க்கால் வழியாக வெள்ளாற்றுக்கு 2000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நீர் நேராக கடலில் சென்று கலக்கிறது.
வெள்ளாற்றில் நீர் வெளியேற்றப்படுவதால் காட்டுமன்னார்கோவில் பகுதி கிராமங்களில் வெள்ள அபாயம் நீங்கியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மழை காலங்களில் ஏரிக்கு வரும் உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
இந்த நீரை தேக்கி வைக்க கொள்ளிடம் ஆற்றிலும், வெள்ளாற்றிலும் தடுப்பணைகள் அமைக்க அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior