உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

புதுவை பதிவு வாகனங்கள்: கடலூரில் தொடர்ந்து ஆய்வு

கடலூர்,நவ.14:

புதுவை மாநிலத்துக்கு வரி செலுத்தி விட்டு, கடலூரில் இயக்கப்படும் வாகனங்கள் வட்டாரப் போக்கவரத்துத் துறை அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இயக்கப்படும் இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் 30 சதவீதம் புதுவை மாநிலத்தில் தாற்காலிக முகவரி கொடுத்து பதிவு செய்யப் பட்டவைகளாக உள்ளன. வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களே பெரும்பாலும் புதுவை மாநிலத்துக்கு சாலைவரி செலுத்திவிட்டு, கடலூர் மாவட்டச் சாலைகளைத் தேய்ப்பவர்களாக இருக்கிறார்கள்.
புதுவை மாநிலத்தில் பதிவு செய்து வாகனங்களை வாங்கினாலும், தமிழகத்தில் வரி செலுத்தி மறுபதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் அவ்வாறு செய்யாமல், அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டால் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சலில் பலர் புதுவைப் பதிவு வாகனங்களை தமிழகத்தில் இயக்கி வருகிறார்கள். இதனால் ஆண்டுக்கு ரூ. 20 கோடி வரை தமிழக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது.
இத்தகைய வாகனங்களை ஆய்வு செய்து வரி செலுத்தச் செய்யுமாறும், அபராதம் விதிக்குமாறும் அண்மையில் தமிழக அரசு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்நது கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் நடத்திய சோதனையில் ரூ. 13.7 லட்சம் வரி வசூலிக்கப்பட்டது.
இந்த மாதம் கடந்த 2 நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் முதுநிலை ஆய்வாளர் சுதாகர், இளநிலை ஆய்வாளர் வேலுமணி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் போலீஸôர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கின. இவற்றில் 125 வாகனங்களில் உரிமையாளர்கள் கடலூரில் வசிப்பவர்கள் என்று உறுதி செய்யப்பட்டது வரி செலுத்துமாறு அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior