உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

மரத்தில் தோன்றிய திடீர் நந்தி


கடலூர்,நவ. 13:


விநாயகர் கோயில் திருப்பணிக்கு அரச மரத்தை வெட்டிச் செதுக்கியபோது உள்ளே இருந்த நந்தி வெளியில் தெரிந்தது. பக்தர்கள் திரண்டு வந்து நந்தியை வழிபட்டனர்.
கடலூர் திருப்பாப்புலியூர் பான்பரி மார்க்கெட் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக் காரர்களால் உருவாக்கப்பட்டது. இந்த அங்காடியில் பழமை வாய்ந்த சிறிய மங்கள விநாயகர் கோயிலும் அதை அடுத்து அரச மரமும் உள்ளது. விநாயகர் கோயில் திருப்பணி அண்மையில் தொடங்கியது.
கோயிலைச் சற்று விரிவுபடுத்துவதற்கு வசதியாக பெரிய அரச மரத்தின் அடிப்பகுதியில் கொஞ்சம் வெட்டி எடுத்தனர். ஆனால் மரத்துக்குள் இருந்த சிறிய நந்தி வெளியே தெரியவந்தது. சுமார் ஒரு அடி உயரம் கொண்டதாக அந்த நந்தி காணப்பட்டது. இவ்வளவு காலமாக விநாயகரை வழிபட்டுவந்த பக்தர்களுக்கு நந்தியைக் கண்டதும் ஆச்சர்யமும் மிகுந்த பக்தியும் வெளிப்பட்டது.
உடனே மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதுகுறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் பார்த்திபன் கூறுகையில், விநாயகர் கோயிலில் விநாயகர் சிலை மட்டும்தான் இருந்தது. இடவசதிக்காக அரச மரத்தை சற்று வெட்டினோம். அப்போது உள்ளே இருந்து நந்தி வெளிப்பட்டது. அரச மரம் சிறியதாக இருந்தபோது அருகில் நந்தியும் இருந்து இருக்கலாம். காலப் போக்கில் அரச மரம் வளர்ந்து பெரிதாகியபோது, நந்தி உள்ளே மறைந்து விட்டது. வெளியில் தெரிந்த விநாயகருக்கு மட்டும் பூஜைகள் நடந்து வந்தன. தற்போது மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்ததும் நந்தி வெளிப்பட்டது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior