உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

என்எல்சி பள்ளியில் மாவட்டக் கலைக்கழப் போட்டி

நெய்வேலி நவ. 13:

கடலூர் கல்வி மாவட்டக் கலைக்கழக மையப் போட்டி விழா நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேநிலைப் பள்ளியில் வெள்ளிகிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியை ஆர்.எஸ்.மணிமொழி தலைமை வகித்தார். கல்வித்துறை செயலர் எம்.சுகுமார் விழாவைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.அமுதவல்லி, என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொதுமேலாளர் சி.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக நவம்பர் 11, 12 ஆகிய இருதினங்களும், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவ,மாணவியருக்கு இடையேயான தனித்திறன் ஆய்வுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை என்எல்சி பெண்கள் மேநிலைப்பள்ளித் உதவித் தலைமையாசிரியர் ஆர்.எஸ்.மங்கையர்கரசி, உடறக்கல்வி இயக்குநர் ரேவதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior