உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

மாநில சதுரங்கப் போட்டி மாணவி அட்சயா சிறப்பிடம்

பண்ருட்டி,நவ. 13:

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் ஜான்டூயி பள்ளி மாணவி எஸ்.அட்சயா கலந்துகொண்டு சிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார்.
பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் உடல் ஊனமுற்ற மாணவி எஸ்.அட்சயா, கடந்த மாதம் மாவட்ட அளவில் காடாம்புலியூரில் நடைபெற்ற சதுரங்க குறுவட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் சிதம்பரத்தில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றார்.
7.11.2009 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர், 10.11.2009 அன்று மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துக்கொண்ட மாணவி அட்சயாவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சான்றிதழை வழங்கி பாராட்டினர். பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்ற மாணவி எஸ்.அட்சயாவை பள்ளி தாளாளர் வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி வாழ்த்தி பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior