உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

பண்ருட்டியில் கனமழை

பண்ருட்டி,நவ.14:

பண்ருட்டியில் கடந்த இரு தினங்களாக விட்டிருந்த மழை, வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்ய தொடங்கியது.
சனிக்கிழமை காலை 9 மணி வரை விட்டுவிட்டு பெய்த மழை, மாலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது.
இதனால் பண்ருட்டி தாழ்வானப் முக்கியப் பகுதிகள் தண்ணீர் தேங்கி மிதந்தன. கடந்த வாரம் பெய்த கனமழையல் பாதிக்கப்பட்ட பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு சமயத்தில், தற்போது மீண்டும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணாக மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள்வேதனை அடைந்துள்ளனர்.
கடலூரில்...
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக ஓய்ந்து இருந்த மழை சனிக்கிழமை மீண்டும் கொட்டத் தொடங்கியது. மீண்டும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மேலும் பலத்த மழை பெய்யும் என்று அறிவித்து இருப்பதால், டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடிப் பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior