உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

வால்வு உடைந்து வீணாகும் குடிநீர்

பண்ருட்டி,நவ.13: எலந்தம்பட்டு ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் வால்வு உடைந்து தண்ணீர் வீணாகிறது. (படம்)
பண்ருட்டி வட்டம் எலந்தம்பட்டு ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ரூ.2.44 லட்சம் செலவில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தொட்டியில் இருந்து வீடுகளுக்கு தண்ணீர் விநியோகத்துக்கான பைப்பில் பொருத்தப்பட்டுள்ள வால்வு உடைந்து தண்ணீர் வீணாக கீழே செல்கிறது. வால்வு உடைந்து பல நாள்கள் ஆகியும், இது வரை யாரும் சரி செய்யாததால் தண்ணீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும் தொட்டியின் பல பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், கீழ் பகுதி பில்லர்கள் உடைந்து சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் அருகே அமைந்துள்ள இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் வால்வை மாற்றியும், சேதம் அடைந்துள்ள பகுதிகளை சீர் செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior