உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

கட்டுரை, ஓவியப் போட்டி

கடலூர்,நவ.15:

கடலூர் அருங்காட்சியகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டிகள் திங்கள்கிழமை (இன்று) நடைபெறுகிறது.
இதுகுறித்து கடலூர் அருங்காட்சிகக் காப்பாட்சியர் க.பன்னீர்செல்வம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் நேத்தாஜி சாலை ராதாகிருஷ்ணன் செட்டியார் திருமண மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்படும். 16-ம் தேதி காலை 10 மணிக்கு ஓவியப் போட்டியும், பிற்பகல் 1 மணிக்கு ஓவியப் போட்டியும் நடைபெறும். ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பூக்கள் அல்லது விலங்குகளை ஓவியம் வரைய வேண்டும். 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் கார்ட்டூன் ஓவியம் வரைய வேண்டும். மனிதருள் மாணிக்கம் என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். 5 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இயற்கைக் காட்சிகள் குறித்து ஓவியம் வரைய வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், புகழ்பெற்ற வரலாற்றுக் கட்டடங்களை ஓவியம் தீட்ட வேண்டும். நேருவின் அரசியல் வாழ்க்கை என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior