உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

விபத்து: 2 பெண்கள் சாவு

கடலூர்:​ 
 
                            கடலூரில் திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்து திரும்பிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பெண்கள் இறந்தனர்.​ 60 பேர் காயம் அடைந்தனர். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ​(இந்தியக் கம்யூனிஸ்ட் ஆதரவு)​ கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்த வடக்குப் பாளையத்தில் இருந்து வந்திருந்தவர்கள்,​​ மினி லாரி ஒன்றில் ஊர் திரும்பினர்.​ மினி லாரி குள்ளஞ்சாவடியை ​ அடுத்த பெத்தநாயக்கன் குப்பம் அருகே சென்றுக் கொண்டு இருந்தபோது,​​ லாரியின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதில் பயணம் செய்த சின்னப்பனின் மனைவி அற்புதமேரி ​(40),​ ராயர்பிள்ளையின் மனைவி இருதயமேரி ​(49) ஆகியோர் பலத்தக் காயம் அடைந்தனர்.​ கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் இறந்தனர்.÷காயமடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ​(பொறுப்பு)​ எஸ்.நடராஜன்,​​ அய்யப்பன் எம்எல்ஏ,​​ நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன்,​​ இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.மணிவாசகம்,​​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior