உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

பாசன மதகில் பைக் மோதல் வாலிபர் பலி: 2 பேர் காயம்

காட்டுமன்னார்கோவில் : 

                  குமராட்சி அருகே மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் இறந்தார்.  இருவர் படுகாயமடைந்தனர்.
              குமராட்சி அடுத்த தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (21). நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான மணலூர் வினோத், ராயநல் லூர் மாரித்து ஆகியோருடன் சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். மெய்யத்தூர் அடுத்த கோப்பாடி அருகே வளைவில் திரும்பியபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த பாசன மதகில் மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வினோத் (21) இறந்தார். முத்து மற்றும் மாரிமுத்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குமராட்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior