உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

அள்ளூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சேத்தியாத்தோப்பு : 

                 சேத்தியாத்தோப்பை அடுத்த அள்ளூர் நெடுஞ் சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
 
            சேத்தியாத்தோப்பை அடுத்த அள்ளூரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சி தலைவர் ஞானமணி கொடுத்த தகவலின் பேரில் மண்டல துணை தாசில்தார் விஜயா, நில அளவர் சேகர், வருவாய் ஆய்வாளர்கள் பன்னீர் செல்வம், ஜெயராமன், வி.ஏ.ஓ.க்கள் பாண்டியன், சந்திரகாசன் மற்றும் கிராம பொதுமக்கள், ஊராட்சி தலைவர் ஞானமணி, ஒன்றிய கவுன்சிலர் சுதா சம்பத் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior