உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

சிறுபாக்கத்தில் நாய்கடி மருந்துகள் இருப்பு வைக்க கோரிக்கை

சிறுபாக்கம் : 

              மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களின் அவரச கூட்டம் நடந்தது.
 
            ஊராட்சி தலைவர் செந்தாமரைகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். உதவியாளர் பாபுதுரை வரவேற்றார். சிறுபாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தட்டுப்பாடின்றி நாய்கடி மருந்துகள் இருப்பு வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள தெருக்களில் சுற் றித்திரியும் வெறிநாய்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்கு கூட்டங் களை பிடித்து காப்பு காடுகளில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                     திட்டக்குடியில் இருந்து மங்களூர், ஒரங்கூர், கள்ளக்குறிச்சியில் இருந்து மாங்குளம், எஸ்.நரையூர், விருத்தாசலத்தில் இருந்து ரெட்டாக்குறிச்சி, பொயனப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு டவுன் பஸ்களை திட்டக்குடி தாலுகாவின் குறுவட்ட மைய தலைமை இடமான சிறுபாக்கம் வரையில் நீட்டிப்பு செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சிறுபாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior