உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை பெற இருப்பிட சான்று கோரி மனைவி விண்ணப்பம்

திட்டக்குடி : 

             வெளி நாட்டில் இறந்த கணவரின் உடலைப் பெற, இருப்பிட சான்று கோரி அவரது மனைவி, தாசில்தாரிடம் மனு அளித்தார்.

              மங்களூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (37). இவருக்கு வளர் மதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பக்ரைன் நாட்டிற்கு கூலி வேலைக்காக சென்ற கணேசன், கடந்த 5ம் தேதி எதிர்பாராமல் இறந்தார். இது குறித்து கணேசனின் மனைவி வளர்மதிக்கு பக்ரைன் நாட்டிலிருந்து போனில் தகவல் தெரிவிக்கப் பட்டது. தனது கணவர் கணேசன் உடலைப் பெற்று இறுதி சடங்கு செய்திட, இருப்பிட சான்று கோரி திட்டக்குடி தாசில்தார் கண்ணனிடம், நேற்று காலை வளர்மதி விண்ணப்பம் கொடுத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior