உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

நாளை குரூப் 2க்கான எழுத்துத் தேர்வு : 4 மையங்களில் 16,973 பேர் எழுதுகின்றனர்


கடலூர்: 

                   கடலூர் மாவட்டத்தில் நாளை 11ம் தேதி நடக்கவுள்ள குரூப் 2 நிலை அலுவலர்களுக்கான எழுத்து தேர்வில் மாவட்டம் முழுவதும் 4 மையங்களில் 16 ஆயிரத்து 973 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை 11ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 2 அலுவலர்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நான்கு மையங்களில் 38 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது. இதில் கடலூரில் 9,059 பேரும், விருத்தாசலத்தில் 2,591 பேர் உட்பட 16 ஆயிரத்து 973 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மாணவர்கள் எளிதில் மையங்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க சப் கலெக்டர், டி.எஸ்.பி., நிலையில் பறக்கும் படை அமைக்கப் பட் டுள்ளது. இதுவரை தேர்வு எழுதுவதற்கான நுழைவு அனுமதிச்சீட்டு கிடைக் காதவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'எம்' பிரிவில் நேரில் தொடர்பு கொண்டு மாற்று நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior