உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

ஒருங்கிணைந்த பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் மறியல்

சிதம்பரம்: 

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பாடத் திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்க கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு கடந்த 2002ம் ஆண்டு துவங்கப் பட்டது. இப்பாடத் திட்டத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் நேரிடையாக ஐந்தாண்டு படிப்பான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., படிக்கலாம். ஆனால் இப்பாடத் திட்டத்திற்கு 2009ம் ஆண்டு வரை அரசு அங்கீகாரம் பெறப்படவில்லை. இதனால் கடந்த காலங்களில் படித்த மாணவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப் பட்டும் அங்கீகாரம் பெறப் படவில்லை. மூன்று ஆண்டுகள் முடித்தவர்களுக்கு இளங்கலை பட்டம் வழங்கப்படும் என கூறியும் தற்போது முடித்தவர்களுக்கு இதுவரை வழங்கப் படவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த ஒருங்கிணைந்த பாடத்திட்ட மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலை நுழைவாயில் முன் சாலையில் தடுப்புகளை போட்டு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                        ஒருங்கிணைந்த பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.  மூன்றாண்டு முடித்தவர்களுக்கு இளங்கலை பட்டம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகம், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி  கோஷம் எழுப்பினர். இரண்டு மணி நேரம் மறியல் நடந்தது. துணைவேந்தர் ராமநாதன் மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது 'அங்கீகாரம் தொடர்பாக அரசுக்கு முறைப்படி கடிதம் மூலம் கோரப் பட்டுள்ளது. வரும் 12ம் தேதி சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச உள்ளோம். மறுநாள் செவ்வாய் கிழமை நல்ல முடிவு தெரிவிக்கப்படும்.
 
                      எங்கள் மேல் நம்பிக்கை இல்லையென்றால் மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர் எங்களுடன் வரலாம். இனி வரும் காலங்களில் மூன்று ஆண்டு படிப்பு முடித்த உடன் இளங்கலை பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.  இதற்கு முன் உள்ள மாணவர்களுக்கு மூன்றாண்டு பட்டம் வழங்க கவர்னர் ஒப்புதல் கோரப்படும்' என்றார். உடன் பதிவாளர் ரத்தினசபாபதி மற்றும் அனைத்து துறை தலைவர்கள் இருந்தனர். துணைவேந்தர் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior