உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

அறைகள் ஒதுக்கும் வரை நீதிமன்றப் புறக்கணிப்பு தொடரும்

 பண்ருட்டி:

                  புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அறைகள் ஒதுக்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என வழக்கறிஞர் சங்க தலைவர் சி.அசோகன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் சங்க தலைவர் சி.அசோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது:

                    பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு பணி நிறைவு பெற்றுள்ளது. இதில் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அறைகள் ஒதுக்கப்படாததால் வழக்கறிஞர்கள் வீதியில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு அறை ஒதுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

                            ஆனால் மாவட்ட நீதிபதி பரிசீலிக்கவில்லை. இதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகளும், பொது மக்களும் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து ஏப்ரல் 8-ம் தேதி மூத்த வழக்கறிஞர் ஜி.குணாளன் தலைமையில் நடைபெற்ற மறு ஆய்வு கூட்டத்தில் வழக்கறிஞர் சங்க கோரிக்கையை மாவட்ட நீதிபதி பரிசீலிக்காத நிலையில் அறை ஒதுக்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்போவதாக சங்கத் தலைவர் சி.அசோகன் தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior