உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் தூக்கியெறிவார்கள் : செங்கோட்டையன் 'ஆரூடம்'

 சிதம்பரம்: 

               தி.மு.க.,வை வரும் தேர்தலில் மக்கள் தூக்கியெறிவார்கள் என மாஜி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
 
                  நெய்வேலிக்கு ஜெயலலிதா வரும் 18ம் தேதி வருவது தொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட அ.தி. மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடந் தது. மாவட்ட அவைத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சி அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் முன்னிலை வகித்தனர். நகர செயலா ளர் சுந்தர் வரவேற்றார்.  

தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் சிறப்பாளராக பங்கேற்று பேசியதாவது: 

              நெய்வேலியில் ஜெயலலிதா பங்கேற்கும் விழா தமிழ்நாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியிலும் அ.தி.மு.க., விற்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும். ஜெயலலிதாவையோ, கட்சியையோ யாராலும் அழிக்க முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி உடைந்துவிடும். மக்கள் தி.மு.க.,வை தூக்கியெறிந்து விடுவார்கள். 2001- 2005 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் மின் வெட்டே இல்லை. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் மின்தட் டுப்பாடு ஏற்பட்டு தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள், சிறு தொழில் நடத்துபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஜவுளி ஏற்றுமதியில் 4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், முன்னாள் எம். எல்.ஏ., அருள், ஜெ., பேரவை மாரிமுத்து, முன் னாள் நகர மன்ற தலைவர் குமார், முன்னாள் சேர்மன்கள் தேன்மொழி காத்தவராயசாமி, செஞ்சிலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior