உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

என்எல்சி ஊழியர்களுக்கு 35% ஊதிய உயர்வு

 நெய்வேலி:

                   என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தத்தின் போது அடிப்படை சம்பளத்தில் 35 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடந்த தொமுச நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.

                   மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர்கள் உட்பட, 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பொறியாளர் போக எஞ்சிய 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளித் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொமுச நிர்வாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகள் 60 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் போது பேச்சுவார்த்தை விவரங்களைக் கேட்டறிந்த சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகள், நிர்வாகம் நிர்ணயித்த ஊதிய உயர்வு சதவீதத்தை ஏற்க மறுத்துனர். பின்னர் அடிப்படை சம்பளத்தில் 30 முதல் 35 சதவீத ஊதிய உயர்வும், பொதுவான அலவன்ஸ் 46 சதவீத உயர்வும், சுரங்கத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 23 சதவீத அலவன்ஸ், இன்கிரிமென்ட் 3 சதவீத உயர்வும், புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் 01-01-2007 முதல் 31-12-2011 என காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தொமுச தலைமை நிர்வாகிகள் 2-ம் நிலை நிர்வாகிகளின் கோரிக்கையை முன்வைத்து பேச்சு நடத்துவது எனவும், நிர்வாகம் பணிய மறுத்தால் போராட்ட நடவடிக்கையில் இறங்குவது எனவும் முடிவு செய்துள்ளனர்

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior