உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் மோதல் மாவட்ட செயலாளர் மீது வழக்கு


குறிஞ்சிப்பாடி: 

                  வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தகராறு செய்த மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வடலூர் பரமேஸ்வரி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் திருமாறன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருமாறன் பேச்சிற்கு, வடலூர்  நகர பொருளாளர் நிமிலிஸ் ராஜ்குமார் (34) எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் நிமிலிஸ்ராஜ்குமார், சிவக்குமார் இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட செயலாளர் திருமாறன், துணை செயலாளர் திருமேணி ஆகியோர் மீது வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior