உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

கேள்வித்தாளில் தவறான அச்சடிப்பு பாலிடெக்னிக் மாணவர்கள் குழப்பம்


கடலூர்: 

                         பாலிடெக்னிக் தேர்வில் கேள்வித்தாளில் ஏப்ரல் என்பதற்கு பதில் அக்டோபர் என தவறாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த ஏப்ரல்  6ம் தேதி முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வாரிய பருவ தேர்வுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு கேள்வித்தாளிலும் முதலில் கேள்வித்தாளின் குறியீடு எண் அதற்கு கீழ் எந்த ஆண்டு என அச்சடிக்கப்பட்டு இருக்கும். 8ம் தேதி மதியம் மூன்றாம் ஆண்டு (ஆறாம் பருவம்) மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கு பவர் சிஸ்டம் - 2  தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு  வழங்கப்பட்ட கேள்வித் தாளில் கேள்வித்தாள் குறியீடு எண். 697 என்றும், அக்டோபர் 2010 என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 2010 என்பதற்கு பதிலாக அக்டோபர் 2010 என 'பிரிண்ட்' ஆகி இருந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர். இதனால் தேர்வின் போது மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அது தவறாக 'பிரிண்ட்' செய்யப்பட்டது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அனைவரும் தேர்வு எழுதினர். கல்வித்துறை ஏற்படுத்திய இந்த குழப்பத்தால் மாணவர்கள்  மன உளைச்சலுக்கு ஆளாயினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior