உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

காலாவதி மருந்துகள் எரிப்பு சிதம்பரம் அருகே பரபரப்பு

 கிள்ளை: 

                           சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடி சாலையோரத்தில் காலாவதியான மருந்துகள் எரிக்கப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் போலி மருந்து பிரச்னை எழுந்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனை, மருந்து கடைகளில்  சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிதம்பரம் - கிள்ளை சாலையில் நக்கரவந்தன்குடி வளைவில் உள்ள கருவைகாட்டுப் பகுதியில் சாலையோரத்தில் காலாவதியான மருந்துகள் எரிக்கப்பட்டும், அருகே உள்ள முட்புதரில் மருந்துகள் கொட்டியும் கிடந்தது.  காலாவதியான மருந்துகளில்  டானிக் மற்று 'சிரப்' உள்ளிட்டவைகளில் பழைய லேபிள்களை நீக்கி 2010 மற்றும் 2011ம் ஆண்டு வரை செல்லுபடிக்கான போலி லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior