உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

ரூ.3.50 லட்சம் திருட்டு சிதம்பரம் அருகே மீண்டும் திருடர்கள் கைவரிசை

 சிதம்பரம்:

                  சிதம்பரம் அருகே பி.முட்லூர் மெயின்ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு 3 வீடுகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களின் தொடர் கைவரிசையால் அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் நிம்மதி இழந்து அச்சத்தில் உள்ளனர். பி.முட்லூர் மெயின்ரோட்டில் உள்ள ரிசானா என்பவர் வீட்டில் ரூ.30 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருள் ஆகியவையும், ரஹ்மான்  வீட்டில் ரூ.11 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் நகைகள் ஆகியனவும், முக்தர்அலி வீட்டில் டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் திருடப்பட்டன. மேலும் அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மார்ச் 6-ம் தேதி புதுச்சத்திரத்தில் 3 கடைகளை உடைத்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

                    இதேபோன்று கடந்த மாதம் பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்தைச் சேர்ந்த பெரியப்பட்டு பகுதியில் 9 கடைகள் உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்களும், பி.முட்லூர் நெடுஞ்சாலையில் 9 கடைகளை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்களும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் சம்பவங்களை பார்க்கும் போது போலீஸôருக்கு சவாலாக இந்த சம்பவங்கள் நடைபெறுகிறதோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior