உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 
 
                         பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதி செய்து தர வேண் டும். விடைத்தாள் ஒன் றுக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஊதிய முரண் பாடுகளை நீக்க அமைக் கப்பட்ட ஒரு நபர் கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.
 
                        மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கலைப் பிரிவு பாடங்களை துவங்க வேண்டும். போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தனசேகரன் வரவேற்றார். மாநில செய்தி தொடர்பாளர் சீனுவாசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior