உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

கடலூரில் போலி இருமல் மருந்து தயாரிப்பு தி.மு.க., பிரமுகர் மகனிடம் விசாரிக்க முடிவு

 கடலூர்:

                       போலி மருந்து விற்பனை தொடர்பாக, தி.மு.க., பிரமுகர் மகனிடம் விசாரிக்க சி.பி. சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலி இருமல் மருந்து தயாரிப்பு குறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் சரணடைந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செல்வ விநாயகர் ஏஜன்சி என்ற பெயரில் மொத்த மருந்து வியாபாரம் செய்து வந்த வள்ளியப்பன் என்பவரை கடந்த 30ம் தேதி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர்.  அதில் கிடைத்த தகவலின் பேரில், வள்ளியப்பனுக்கு உதவிய மருந்து விற்பனை பிரதிநிதி முருகேசன் (31), புதுச்சேரி ஆனந்த் ஆகியோரை கைது செய்து 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஆயிரம் போலி 'பெனட்ரில்' இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
                     விசாரணையில், வள்ளியப்பன் உள்ளிட்ட மூவரும், 'அல்டெக்ஸ்' இருமல் மருந்தை வாங்கி, அதன் லேபிளை கிழித்து, சிவகாசியில் அச்சடித்து வைத்திருந்த 'பெனட்ரில்' லேபிளை ஒட்டி விற்பனைக்கு அனுப்பியது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6ம் தேதி சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கில் கைது செய்யப்பட்ட வள்ளியப்பன் உள்ளிட்ட மூவரையும் மேல் விசாரணை நடத்த நேற்று முன்தினம் கோர்ட் அனுமதி பெற்று விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே வள்ளியப்பன் போலியாக 'பெனட்ரில்' இருமல் மருந்து தயாரிக்க 'அல்டெக்ஸ்' மருந்து மொத்தமாக வழங் கிய சென்னை குரோம் பேட்டையில் மருந்து கம்பெனி நடத்தி வரும் கடலூர் தி.மு.க., பிரமுகர் மகனையும், போலி லேபிள் அச்சடித்துக் கொடுத்த சிவகாசியை சேர்ந்த அச்சக உரிமையாளரையும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior