உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

புதுவையில் இருந்து காரில் கடத்தப்பட்ட 400 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்

 கடலூர்:

                  புதுவையில் இருந்து காரில் 400 லிட்டர் பெட்ரோல் கடத்தி வந்த ராஜேந்திரன் (54) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வு போலீஸ் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் தணிக்கைச்சாவடி போலீóஸ் உதவி ஆய்வாளர் தணிகாச்சலம் ஆகியோர் கடலூர் ஆல்பேட்டை தணிக்கைச் சாவடியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். புதுவையில் இருந்து கடலூருக்கு வேகமாக வந்த அம்பாசிடர் காரை நிறுத்தி போலீஸôர் சோதனையிட்டனர். இதில் காரில் 12 கேன்களில் மொத்தம் 400 லிட்டர் பெட்ரோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை வரி வித்தியாசம் காரணமாக கடலூரை விட புதுவையில் பெட்ரோல் விலை குறைவு என்பதால், 400 லிட்டர் பெட்ரோல் புதுவை மாநில எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வாங்கி வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி காரில் வந்த சிதம்பரம் வட்டம் கொட்டாப்புளிச் சாவடியைச் சேர்ந்த ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். காருடன் 400 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப் பட்டது.385 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை சிக்கியது கடலூர் முதுநகரில் வெள்ளிக்கிழமை வணிகக்குற்ற புலனாய்வு போலீஸôர் நடத்திய திடீர் சோதனையில் 385 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை சிக்கியது.  முதுநகர் அக்கரை கோரி கிராமத்தில் போலீஸôர் திடீர் சோதனை மேற்கொண்டனர். குட்டியாண்டி மகன் சதீஷ் (24) என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது, தோட்டத்தில் 11 கேன்களில் 385 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் போலீஸôர் பறிமுதல் செய்தனர். சதீஷ் கைது செய்யப்பட்டார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior