உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

புதுச்சத்திரம் அருகே சாலை மறியல் செய்த 6 பேர் கைது

 பரங்கிப்பேட்டை : 

                 புதுச்சத்திரம் அருகே சாலை மறியல் செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
 
                    புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சிலம்பிமங்களத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து சிலம்பிமங்களத்தை சேர்ந்த தர்மராஜ் (25), ராஜகோபால் (40), சுதாகர் (28), கார்த்திகேயன் (29), நாகராஜ் (41), சத்தியசீலன் (23) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். மேலும் சாலை மறியல் நடந்தபோது சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்த அடையாளம் தெரியாத ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior