உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

சிதம்பரம் : 

                    புவனகிரி ஒன்றியத்தில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில்  நடந்தது.

                      சிதம்பரம் ஷிட்டோரியா இந்தியன் கராத்தேப் பள்ளி, புவனகிரி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மஞ்சக் கொல்லை மக்கள் நல பாதுகாப்பு சங்கம் இணைந்து  புவனகிரி ஒன்றியத்தில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் இருந்து பெருமாத்தூர் வரை  நடந்தது. நிகழ்ச் சிக்கு புவனகிரி ஒன்றிய வட்டார வளமைய மேற் பார்வையாளர் கலைச் செல்வன் தலைமை தாங் கினார். ஆசிரியர் சேரமான் வரவேற்றார். மாவட்ட தகவல் ஆவண காப்பு அலுவலர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கராத்தே நிபுணர் டாக்டர் இளங்கோவன் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். சிதம்பரத்தில் இருந்து தொடர் ஓட்டமாக பெருமாத்தூர் சென்ற கராத்தே மாணவர்கள், கல்வின் அவசியத்தை வலி யுறுத்தி பொது மக்களிடம்  துண்டு பிரசுரம் வழங்கினர். பின்னர் பள்ளி செல்லாக்குழந்தைகள் குறித்து கணக் கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில்  கராத்தே வீரர்கள் மற்றும் மஞ்சக் கொல்லை மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பங்கேற்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior