உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

இன்று விவசாயிகள் ​குறைகேட்கும் கூட்டம்

 கடலூர்:

                 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் இன்று ​(வெள்ளிக்கிழமை)​ மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10-30 மணிக்கு நடைபெறும்.​ கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.​ 

                     எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.​ தெரிவிக்கப்படும் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும்,​​ தொடர் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரால் ​ அறிவுறுத்தப்பட்டு உள்ளது.​ இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior