உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

தீ விபத்து: ரூ.1 லட்சம் சேதம்

திட்டக்குடி :

                     திட்டக்குடி அருகே திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவிலுக்கு எதிர்புறம் கண்ணன், ஆறுமுகம் ஆகியோர் டீ கடை வைத்திருந்தனர். நேற்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு டீ கடைகளும் எரிந்து சாம்பலானது. காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த கருணாநிதி என்பவருக்கு சொந்தமான கடையின் முன்புற கொட்டகையும் சேர்ந்து எரிந்தது.தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கிராம மக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் கடையிலிருந்த இரண்டு பிரிட்ஜ் மற்றும் பாத்திரங்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்திற்கான காரணம் குறித்து திட்டக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior