உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம் : 

                       விருத்தாசலத்தில் போலீசாரை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர், சிவஞானம் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் எம்.எல்.ஏ., லதா கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பழையப்பட்டினம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீட்பு வழக்கு நடத்தி வெற்றி கண்ட இளைஞர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் திட்டமிட்டு போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி போலீசாரை கண்டித்து பேசினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் தனசேகரன், மூசா, வட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் திரு அரசு, மாவட்ட குழு அசோகன், ராஜேஷ் கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior