உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

"கள்' இறக்க அனுமதி கோரி சாலை மறியல் 34 பெண்கள் உட்பட 102 பேர் கைது

திட்டக்குடி :

                   திட்டக்குடியில் "கள்' இறக்க அனுமதி வழங்கிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 34 பெண்கள் உட்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாடார் பேரவை சார்பில் "கள்' இறக்க அனுமதி வழங்கவும், நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிட்டியின் அறிக்கையினை உடனடியாக வெளியிட வேண்டும். கடந்த தேர்தலின்போது முதல்வர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், மதுபான பட்டியலிலிருந்து கள்ளை நீக்கிட வேண்டும். கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

                   அதன்படி நேற்று காலை 10.20 மணிக்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில், துணை தலைவர் அண்ணாத்துரை, நாடார் உறவின்முறை சங்க தலைவர் விருத்தாசலம் குருசாமி, செயலாளர் மாரியப்பன், மகளிரணி மாவட்ட தலைவர் மகாராணி, ஆலோசகர் அலமி முன்னிலையில் பஸ் நிலையத்திலிருந்து நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட் டம் நடத்தினர். தொடர்ந்து நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி சப்- இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். முன் அறிவிப்பின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பினை ஏற்படுத்திய பிரிவில் 34 பெண் கள் உட்பட 102 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior