உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி, பருப்பு கடத்திய டிரைவர் உட்பட 2 பேர் கைது

பண்ருட்டி : 

                       பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி, பருப்பு  கடத்திய மினி வேன் டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் தலைமையில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தம்மன்,  வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட குழுவினர் பண்ருட்டி பகுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

                     அப்போது கொக்குப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்ற போது தெற்கு தெருவில் டாடா ஏசி டி.என்.31 எச்.8916 எண்ணுள்ள வாகனத்தை சோதனை செய்தனர்.அதில், பொதுவினியோக திட்ட அரிசி 50கிலோ எடை கொண்ட 20 சிப்பம், குண்டு உளுந்து 4 சிப்பம் கடத்தியது தெரியவந்தது.   ரேஷன் பொருட்கள் கடத்திய பண்ருட்டி சென்னை சாலையை சேர்ந்த சக்திவேல்(34),  செக்குமேட்டு தெருவை சேர்ந்த டிரைவர்   ஜெயராஜ்(24) ஆகிய இருவர் மற்றும் ரேஷன் பொருட்கள் டாடா ஏசி வேனையும்  பறிமுதல் செய்தனர். வாகனம் மற்றும் ரேஷன் பொருட்கள் மதிப்பு ஒன்றரை லட்சமாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior