உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

மின்னணு முத்திரைத் தாள் மூலம் ஆவணங்களை பதிவு செய்வது எப்படி?

             புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு முத்திரைத் தாள் மூலம் ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறைகளை பத்திரப் பதிவுத் துறை அறிவித்துள்ளது. இத்திட்டம் அமலில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வசூல் மையங்களை அணுகி அவர்கள் கொடுக்கும் ஒரு படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, முத்திரைத் தீர்வையை பணமாகவோ, வரைவோலையாகவோ, பண மாற்றம் மூலமாகவோ இந்த மையங்களில் செலுத்தலாம். மாதிரி சான்றிதழ் ஒன்றினை பெற்று தாங்கள் அளித்த விவரங்களை பொதுமக்கள் சரிபார்துக் கொள்ளலாம். அதற்கான வசதிகளும் இம்மையங்களில் உள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மின்னணு முத்திரைச் சான்றினை பெற்று ஆவணம் தயார் செய்து பதிவு அலுவலரிடம் தாக்கல் செய்யலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior