உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் தாக்குதல்கடலூரில் பரபரப்பு: கும்பலுக்கு வலை

கடலூர்: 

                      பணம் கேட்டு மிரட்டி முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய கும் பலை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் செல்லங்குப்பம் மின் வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தியின் உறவினரான இவர் நேற்று மாலை கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்டரில் பணம் எடுத்தார். அப்போது அங்கு வந்த செல்லங்குப்பம் காலனியைச் சேர்ந்த சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்டோர் வேலாயுதபாண்டியனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். கும்பல் கூடியதால் சேதுராமன் உள்ளிட்டோர் கலைந்து சென்றனர்.இந்நிலையில் சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்ட கும்பல் இரவு 8 மணி அளவில் செல்லங்குப்பத்தில் உள்ள வேலாயுத பாண் டியன் வீட்டிற்கு சென்று அங்கு நின்றிருந்த "இநோவா' காரை அடித்து நொறுக்கினர். டயரை வெட்டி சேதப்படுத்தினர். பின்னர் வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்தை பார் வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior