உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பல்வகை மாற்றுத் திறனாளிகள் பயிற்சி

கடலூர்: 

                சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பல்வகை மாற்றுத்திறனாளிகளை கையாள்வது குறித்து பயிற்சி கடலூர் ஹெலன் கெல்லர் மையத்தில் நடந்தது.  ஒருமாத காலம் நடந்த இந்த பயிற்சி முகாமில் 27 பணியாளர்கள் பயிற்சி பெற்றனர். பல்வேறு வகையான மாற்று திறனாளிகளுக்கு எவ்வாறு மறுவாழ்வு அளிப்பது, அவர்களுக்கு எந்தந்த வகையில் உதவ முடியும், மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் மாவட்ட திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன் முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். வாழ்ந்து காட்டுவோம் உதவி திட்ட மேலாளர் குமாரசாமி பயிற்சி பற்றிய கையேடுகளை பணியாளர்களுக்கு வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி மேற்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior