உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் கட்டி முடித்து ஆறு ஆண்டாகியும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

பண்ருட்டி:

            பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் சுகாதார வளாகம் கட்டி ஆறு ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடக்கிறது.

          பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனி பகுதியில் ஒருங்கிணைந்த சுகாதார திட்டம் 2003-04ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டி முடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. காலனி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி வீடுகளில் தனிநபர் கழிப்பறை வசதிகள் ஏதும் கிடையாது. இதனால் பக்கத்தில் உள்ள திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதிமக்கள் பலமுறை சுகாதார வளாகம் திறக்க கோரிக்கை வைத்தும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நான்கு லட்சம் அரசு நிதியில் செலவு செய்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் சுகாதார வளாகம் வீணாகி வருகிறது. மக்களின் தேவை அறிந்து கட்டாமல் கமிஷனுக்காக மட்டுமே சுகாதார வளாகங்கள் கட்டுவதால் அரசு நிதி தான் வீணாகி வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior