உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாத மனைகளை வாங்காதீர்நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

நெல்லிக்குப்பம்: 

              நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என கமிஷனர் உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                  நெல்லிக்குப்பம் நகரப் பகுதியில் விற்பனை செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்க வேண்டாம். இம்மனை பிரிவுகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப் படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர முடியாது. அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட மாட்டாது. மீறி வீடு கட்டினால் தடை செய்வதோடு, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். பொதுமக்கள் மனைகள் வாங்கும்போது அவை அனுமதி பெற்றவையா என உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கமிஷனர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior