உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

மின்தடையை கண்டித்து போராட்டம் சிறுபாக்கம் கிராம மக்கள் முடிவு

சிறுபாக்கம்: 

                  சிறுபாக்கத்தில் தொடர் மின்தடையை கண்டித்து பூட்டு போடும் போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுபாக்கம் மற்றும் அதன் இணைப்பு கிராமங்களில் 15 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இரவில் பெரும்பாலும் மின்சாரம் இருப்பதில்லை. இதனால் விவசாய பணிகள், மாணவர்களின் கல்வி, வியாபாரம் பாதிக்கிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட் டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று (7ம் தேதி) காலை 10 மணிக்கு சிறுபாக்கம் இளமின் பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர், மின்வாரிய மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior