உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

பண்ருட்டி 26-வது வார்டில் இருளில் மூழ்கியுள்ள நந்தனார் காலனி போராட்டம் நடத்த முடிவு

பண்ருட்டி:

             இருளில் மூழ்கியுள்ள நந்தனார் காலனியில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலை 12-ம் தேதி மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலர் என்.அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலர் என்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

                  பண்ருட்டி 26-வது வார்டில் நந்தனார் காலனி உள்ளது. 8 சிறிய தெருக்களை கொண்ட இக்காலனியில் மொத்தம் 10 மின் கம்பங்களே உள்ளன. இதில் உள்ள மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை. இதனால் விஷ பூச்சிகளின் மத்தியில் வாழ வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து நகராட்சி மற்றும் மின் வாரியத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலை 12-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்தப் போவதாக என்.அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior