உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

புதுச்சத்திரம் அருகே முன் விரோத தகராறு 7 பேருக்கு போலீஸ் வலை

பரங்கிப்பேட்டை : 

              புதுச்சத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய 7 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

                புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகத்தின் மகன் கணேஷ் பூவாலைக்கு செல்லும்போது மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வேலு, ரங்கநாதன், குமார், செல்வம், முருகவேல், வெங்கடேசன் ஆகியோர் வழிமறித்து தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மணிவண்ணன், வேலு உட்பட 7பேரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior